search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதி ஒதுக்கீடு"

    • நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது.
    • இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள வாரசந்தை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணா சிலை அருகே இயங்கி வருகிறது. தாரமங்கலம் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், இந்த சந்தையில் மளிகை பொருட்கள், காய்கறி, ஆடு, கோழி ஆகியவற்றி வாங்கியும் விற்றும் வருகின்றனர். இங்குள்ள கல்மேடைகளில் கடையை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது மேற்கூறையுடன் கூடிய 156 கடைகள், வணிகப் பயன்பாட்டிற்கான கான்கிரீட் தளங்களைக் கொண்ட 14 கடைகள், சைக்கிள் ஸ்டாண்ட், ஆட்டோ ஸ்டாண்ட், நவீன கழிப்பிட வளாகங்கள், 4 புறமும் சுற்றுச்சுவருடன் கூடிய 12,350 சதுர அடி பரப்பளவில் வார சந்தை புனரமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.2 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று நகராட்சி கூட்ட அரங்கில் நகரமன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட நகர மன்ற துணைத் தலைவர் தனம், நகராட்சி பொறியாளர் பிரேமாஇ நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் வியாபாரிகள், பொதுமக்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சந்தை வளாகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட புளிய மரங்களை அகற்றாமல் பணியை தொடங்குவது என்றும், மழைநீர், கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்கவும், வணிக நிறுவன பயன்பாட்டிற்கு கூடுதலான கடைகளை கட்டுவது குறித்தும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

    • விஜய்வசந்த் எம்.பி. திறந்து வைத்தார்
    • மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு

    நாகர்கோவில் :

    குறுமத்தூரில் ஒய்-73 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட குறுமத்தூர் நியாய விலை கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டுமென்று பொதுமக்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்.

    அதனடிப்படையில் புதிய கட்டிடம் கட்ட பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நிறைவு பெற்று அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஜய்வசந்த் எம்.பி. கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    குறுமத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், களியக்காவிளை பேரூராட்சி மன்ற தலைவருமான சுரேஷ் தலைமை தாங்கினார். சங்க நிர்வாக குழு உறுப்பினர்கள் ஸ்டான்லி, ஜோஸ்வா, சுரேஷ்குமார், வசந்தா, விபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் களியக்காவிளை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் பென்னட், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சலீம், செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 30 பேர், நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் என மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

    இவர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டுதோறும் தலா ரூ.2 கோடி வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி பதவியேற்றவுடன் அறிவித்தார். அதன்படி கடந்த 2022-23-ம் ஆண்டிற்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 கோடியில் முதல் கட்டமாக 33 எம்.எல்.ஏ.க்களுக்கும் 73 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 33 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியாக மேலும் ரூ.40 கோடியே 59 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் தலா ரூ.1 கோடியே 23 லட்சம் வீதம் வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவினை உள்ளாட்சித்துறை சார்பு செயலாளர் கார்த்திகேசன் தெரிவித்துள்ளார்.

    இந்த தொகையை கொண்டு எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள உள்ளனர். மேலும் புதுவையில் அண்ணாதிடல், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளுக்காகவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    • ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
    • பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்

    ராணிப்பேட்டை:

    வாலாஜாவில் நகராட்சி சார்பில் கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பஸ் நிலையம் மற்றும் அங்குள்ள கடைகளை புனரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ரூ. 2 கோடியே 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக பஸ் நிலையத்தில் பழைய கட்டிடங்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் பணிகளை தரமாக மேற்கொள்வதோடு விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இந்த ஆய்வின்போது வாலாஜா நகரசபை தலைவர் ஹரிணி தில்லை, துணை தலைவர் கமலராகவன், நகர தி.மு.க செயலாளர் தில்லை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
    • 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சியில் வியாழக்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. குறிப்பாக வீட்டு வரி தொடர்பாக அதிக அளவு மனுக்கள் வந்திருந்தது. அந்த மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க மேயர் மகேஷ் உத்தர விட்டார்.

    இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஏற்கனவே ஒரு சில சாலைகள் இரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வடசேரியில் இருந்து மணிமேடை வரை உள்ள சாலையை இருவழிப்பாதையாக மாற்றுவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம்.

    அதற்கான அளவீடு பணி நடந்து வருகிறது. போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் போர்டு வைப்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர். 65 இடங்களில் மாநகர பகுதியில் நோ பார்க்கிங் போர்டு வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கான போர்டு மாநகராட்சி சார்பில் தயார் செய்யப்பட்டு போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்படும்.

    புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் நடந்து வருகிறது. தற்பொழுது வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். முதல் கட்டமாக 40 ஆயிரம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்ததற்காக மீட்டர் வந்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு முடிக்கப்படும். புத்தன் அணை குடிநீர் திட்டத்தை தெங்கம்புதூர் பகுதியில் செயல்படுத்த ரூ.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அந்த பணிகள் விரைவில் தொடங்கப்படும். நாகர்கோவில் மாநகர பகுதியில் குடிநீர் பிரச்சி னையை சமாளிப்பதற்கு பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புத்தன் அணையில் இருந்து பரிசோதனைக்கு வரக்கூடிய 22 மில்லியன் லிட்டர் தண்ணீரை கிருஷ்ணன் கோவில் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பொது மக்களுக்கு சப்ளை செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். அதை பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் பட்சத்தில் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது பொறியாளர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி ராம் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க நிலம் வழங்கியவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம்தென்னரசு கூறினார்.
    • விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள ெரயில்வே கேட் மூடப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், வணிகர்கள், மாணவர்கள், நோயாளிகள் மற்றும் பணிகளுக்கு செல்வோருக்கு சிரமம் ஏற்பட்டு வந்தது.

    எனவே இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை பரிசீலித்து ெரயில்வே கேட் சாலையில் மேம்பாலம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

    இந்த சாலை மேம்பாலம் மற்றும் அணுகு சாலை அமைப்பதற்காக சிவகாசி மற்றும் ஆனையூர் கிராமங்களில் 2818 ச.மீ. நிலங்களை கையகப்படுத்தும் பணி வருவாய்த் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால் நிலம் மற்றும் கட்டுமானங்களுக் குரிய இழப்பீட்டு தொகையை தொடர்புடைய நில உடைமையாளர்களுக்கு வழங்க முதல்-அமைச்சர் உத்தரவுப்படி ரூ.5 கோடியே 60 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    நில உடைமையாளர்க ளுக்கான இழப்பீட்டு தொகை இம்மாத இறுதிக் குள் உரிய நபர்களுக்கு வங்கி கணக்கில் செலுத்தப் படும் எனவும், விரைவில் மேம்பாலம் அமைப்ப தற்கான நிதி ஒதுக்கீடு விடுவிக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

    • சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
    • கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதா வது:-

    தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல்துறை மூலம், நடப்பு ஆண்டில் நிலத்தடிநீர் பாசனத்துக்கு உதவும் வகையில் சிறு, குறு விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்க ளுக்குப் பதிலாக புதிய மின்மோட்டார் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

    தமிழ்நாடு அரசால் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் நடப்பு ஆண்டில் விவசாயி களுக்கு பழைய திறனற்ற மின் மோட்டாருக்குப் பதில் புதிய மின்மோட்டார் பம்பசெட் வழங்குவதற்கு 150 பேருக்கு தலா ரூ.15,000 வீதம் ரூ.22.50 லட்சத்திற்கு மானியம் வழங்கிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. மின்மோட்டார் பம்புசெட்டுகள் வாங்க பின்னேற்பு மானியமாக ரூ.15000 அல்லது மொத்த விலையில் 50 சதவீதம் மானியம் இதில் எது குறைவோ அது வழங்கப்படும்.

    இந்த திட்டம் நுண்ணீர் பாசன இணையதளம் வாயி லாக செயல்படுத்தப்படு கிறது. இத்திட்டத்தினை பயன்படுத்திட விரும்பும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்ட கிராமங்க ளில் உள்ள வேளாண் பெருமக்கள் https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயனடைந்திட கேட்டுக் கொள்ளப்படு கிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறி யியல் துறை அலுவல கங்களை அணுகலாம்.

    ராமநாதபுரம், திருப்புல்லானி, மண்டபம், ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை வட்டார விவசாயிகள் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வளா கத்தில் கருவூலக கட்டிட முதல் தளத்தில் அமைந் துள்ள உதவி செயற்பொறி யாளர் அலுவலகத்தையும், பரமக்குடி, நயினார்கோயில், முதுகு ளத்தூர், போகலூர், கமுதி மற்றும் கடலாடி வட்டார விவசாயிகள் பரமக்குடி, சவுகத்அலி தெருவிலுள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம் அல்லது ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக கட்டிடம் 2-வது தளத்தில் அமைந்துள்ள செயற்பொறி யாளர் அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரத்தில் ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஒருங்கிணைந்த பண்ணை திட்டத்தின் கீழ் விவசாயிகள் தங்களிடம் இருக்கின்ற இயற்கை வளங் களை மேம்படுத்தி உரிய முறையில் வளங்களை பயன்படுத்திடவும், பயிர் சாகுபடி முறையில் அதிக பட்ச உற்பத்திக்கான நுட்பங் களை பயன்படுத்தவும், பண்ணைக்கழிவுகளை உற்பத்தி நோக்கங்களுக்காக மறுசுழற்சி செய்திடவும், காலநிலை மற்றும் சமூக பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு பால், கோழி, தேனீ வளர்ப்பு போன்ற கலவையான செயல்பாடுகள் மூலமாக ஆண்டு முழுவதும் நிலையான வருமானம் கிடைக்க வழி செய்கிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டுக்கான மானாவாரி பகுதி வளர்ச்சிக்கான துணை இயக்கத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணைய அமைப்பு 300 எக்டர், நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தபடவுள்ளது. இத்திட்டத்தில் வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் குறைந்தது ஒரு எக்டர் நில உரிமை உடைய வராக இருக்க வேண்டும்.

    மேலும் தனது சொந்த செலவில் ரூ.60 ஆயிரம் மதிப்பில் வேளாண்மை இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், மண் புழு உரத்தொட்டி மற்றும் கால் நடை இனங்களான ஒரு கறவை மாடு அல்லது 10 ஆடுகள் மற்றும் தோட்டக் கலை இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்பு பெட்டி போன்ற வற்றை திட்ட வழிகாட்டு தலின்படி அமைக்க வேண் டும். இவ்வாறு ரூ.60 ஆயிரம் மதிப்பிதல் ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு பினனேற்பு மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும். எனவே அனைத்து வட்டார விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து அல்லது தங்கள் பகுதி வேளாண்மை உதவி இயக்கு நர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

    மேலும் இத்திட்டத்தில் தமிழக அரசின் சிறப்பினமாக இத்திட்டத்தில் தேர்வு செய்யப்படும்

    சிறுகுறு சான்று வைத்துள்ள ஆதிதிராவிட மற்றும் விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் சிறப்பு மானியம் எக்டருக்கு ரூ.12 ஆயிரத்து டன் சேர்த்து மொத்தம் எக்டருக்கு ரூ.42 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

    ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின சிறுகுறு விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • நடவு எந்திரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா மற்றும் அதிகாரிகள், விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் விவசாயி களிடமிருந்து கோரிக்கை மனுகளை கலெக்டர் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து விவசாயிகள் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடிக்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிபாறை அணை திறக்கப்பட்டது. அணை திறக்கப்பட்டு 15 நாட்களாகியும் கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை உள்ளது. ஏற்கனவே சானல்களை தூர்வார வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் சானல்கள் தூர்வாரப்படவில்லை.

    எனவே உடனடியாக சானல்களை தூர்வார நடவ டிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பயிர்கள் கருகும் நிலை ஏற்படும். சானல்களில் உள்ள ஆக்கி ரமிப்புகளை அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண் டும். பழையாற்றின் கரையில் உள்ள மரங்கள் அதிகளவு வெட்டப்பட்டுள்ளது. வள்ளியாற்றில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குமரி மாவட்டத்தில் விளை நிலங்கள் பிளாட்டு களாக மாற்றப்பட்டு வரு கிறது. அனுமதி பெறாமல் பல்வேறு இடங்களில் பிளாட்டுகள் அமைக்கப் பட்டுள்ளது. அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது கன்னிப்பூ சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது. நடவு பணியில் பெண்கள் தான் அதிக அளவு ஈடுபடுவார்கள். தற்பொழுது ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நேரடி விதை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேரடி விவசாயம் செய்வதால் மகசூல் குறையும்.

    எனவே எந்திரம் மூலமாக நடவு பணி மேற்கொள்வதற்கு நடவு எந்திரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவு எந்திரம் மூலமாக நடவு செய்யும் போது, மகசூல் அதிக அளவு கிடைக்கும்.

    தென்னை மரங்களில் நோய் களின் தாக்கம் அதிக ரித்து வருகிறது. இதனால் மகசூல் குறைந்துள்ளது. தேங்காய் விலையும் குறை வாக உள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு தென்னை மரத்தில் தேங்காய் வெட்டுதற்கு ரூ.30 முதல் ரூ.50 வரை கொடுக்க வேண்டியது உள்ளது. அந்த அளவிற்கு தேங்காய் உற்பத்தி இல்லை. தற்பொழுது பனை மரத்திற்கு நல்ல வருவாய் கிடைக்கிறது. எனவே பனை மரத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    இதற்கு பதில் அளித்து கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    குமரி மாவட்டம் முழுவதும் சானல்களை தூர்வாருவதற்கு ரூ.5 கோடியே 24 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து சானல்களும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும். நாளை (16-ந் தேதி) திருவி தாங்கோடு, இரணியல், சேரமங்கலம், முட்டம், ஆசா ரிப்பள்ளம், அத்திக்கடை, சம்பகுளம், கோட்டையடி சானல்கள் தூர்வாரப்ப டும். 19-ந் தேதி பட்டம் கால்வாய், தேங்காய் பட்டணம், தேவி கோடு, மிடாலம் பகுதி யில் உள்ள சானல்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    தற்பொழுது பிரதான சானல்களில் தண்ணீர் சென்று கொண்டு இருப்பதால் படிப்படியாக தூர்வார நடவடிக்கை மேற் கொள் வோம். பல்வேறு இடங்களில் சாகுபடி பணி மேற் கொள்ளப்பட்டு உள்ளதால் விவசாயிகளிடம் கருத்து கேட்ட பிறகு பிரதான கால்வாய் களில் தண்ணீரை அடைத்து தூர்வார நடவ டிக்கை எடுக்கப்படும்.

    சானல்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளுக்கு தேவையான நடவு எந்திரம் மானிய விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விளைநிலங்களை பிளாட்டு களாக மாற்றினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.
    • விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின், வேளாண் இயந்திரமயமாக்கல் உப இயக்க திட்டம் 2022-23 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் 100 பேருக்கு வழங்க ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    அதன் படி தருமபுரி மாவட்டத்திற்கு 70 பேருக்கு பொது பிரிவிற்கும் 30 பேருக்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய பிரிவிற்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

    சிறு மற்றும் குறு விவசாயிகள், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியமும் இதர பிரிவினருக்கு 40 சதவீதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. இதில் SC, ST பிரிவில் சிறு, குறு விவசாயிகளுக்கு கூடுதலாக 20 சதவீதம் மானியம் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில் 2022-2023 ஆம் ஆண்டில் செயல்படுத்தப்படும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராம ஊராட்சிகளில்2022-23 உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பத்துடன் சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார்கார்டு நகல் மற்றும் வங்கி பாஸ்புத்தக நகல் ஆகியவற்றுடன் கீழ்கண்ட அலுவலகங்களை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை அலுவலகத்தில் நேரடியாக கொடுத்து பதிவு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்- 04342 296132, அரூர் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம் உதவிசெயற்பொறியாளர் -04346296077 என்கிற எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையவும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டியளித்தார்
    • தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடவள்ளி,

    வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கோவையில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கோவை குற்றாலம், சாடிவயல் யானைகள் முகாம், சிறுவாணி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகிய இடங்களில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் வனத்துறை அதிகாரிகளு டன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள மலைவாழ் மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    சாடிவயல் யானைகள் முகாமை மேம்படுத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ.8 கோடி அறிவித்துள்ளார். கோழிக்கமுத்தி யானைகள் முகாமை மேம்படுத்துவதற்கும் ரூ.5 கோடி தெப்பக்காடு யானைகள் முகாமை மேம்படுத்த ரூ.7 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுற்றுலா பயணிகள் அனைவரும் இங்கு வந்து கண்டு களிக்கும்படியும் இவற்றைப்பற்றி தெரிந்து கொள்ளும்படியும் நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.

    மேலும் முதுமலை யானைகள் முகாமில் யானை பாகன்களுக்கும் உதவியாளர்களுக்கும், வீடு கட்டுவதற்கு ரூ.10 லட்சம் தரப்பட்டுள்ளது, மேலும் ஊக்கத் தொகையாக ஒரு லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையில் உள்ள ஊழியர்கள் பற்றாக்குறையையும் கூடிய விரைவில் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

    ேலும் தற்போது உள்ள தொழில்நுட்பங்களை பயன்படுத்தி எவ்வாறு வனப்பகுதிகளை பாதுகாப்பது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்றவற்றிற்காக தனி நிதி ஒதுக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறோம்.

    கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கான பாதைகளை சீரமைத்து தேவையான கழிப்பறை வசதிகள் அனைத்தையும் மேற்கொள்வதற்கு ரூ.1 கோடி 30 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மேலும் மக்களின் கோரிக்கை களுக்கு ஏற்ப வனப்பகுதிக்குள் எந்தெந்த சாலைகளை சரி செய்ய முடியுமா அவற்றை சரி செய்வோம், மேற்கொண்டு அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கி வருகிறோம் என தெரிவித்தார்.

    • அமைச்சர் மனோதங்கராஜ், ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
    • 6 சாலைகளுக்கு ரூ.4 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு

    கன்னியாகுமரி :

    கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல், பாலப்பள்ளம், கீழ்குளம், கிள்ளியூர் போன்ற பேரூராட்சிகளில் உள்ள சாலைகள் பழுத டைந்து மிகவும் மோசமான நிலையில் குண்டும் குழியுமாக காணப்பட்டது.

    இதனால் இந்த சாலைகளில் பொதுமக்கள் வாகனங்களிலும், நடந்து செல்லவும் முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

    எனவே அந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், தமிழக முதலமைச்சர், நகராட்சி துறை அமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்தார்.

    இதன் அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைக்க நபார்டு திட்டத்தின் கீழ் கருங்கல் பேரூராட்சிக்குட்பட்ட மலையன்விளை - காக்க விளை சாலையை சீரமைக்க ரூ.82 லட்சமும், பாலவிளை - இரட்டை குளம் சாலையை சீரமைக்க ரூ.54 லட்சமும், பாலப்பள்ளம் பேரூராட்சிக்குட்பட்ட மிடாலக்காடு - மிடாலக் குளம் சாலையை சீரமைக்க ரூ.86 லட்சமும், கீழ்குளம் பேரூராட்சிக்குட்பட்ட செந்தறை - உடவிளை சாலையை சீரமைக்க ரு.70 லட்சமும், குமரி நகர் - காளியர் தோட்டம் - அரசகுளம் சாலையை சீரமைக்க ரூ.54.75 லட்சமும், கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட செவ்வேலி - மாங்கரை - ஐ.ஒ.பி. வங்கி சாலையை சீரமைக்க ரு. 77 லட்சமும் என 6 சாலைகளுக்கு ரூ.4 கோடியே 23 லட்சத்து 75 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்பட்டதை யெடுத்து இந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    ×